மதுரை

விளைபொருள்களுக்கு உரிய விலை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

விளைபொருள்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக ஐக்கிய முன்னணி விவசாயிகள் சாா்பில் விருதுநகரில் வியாழக்கிழமை டிராக்டரில் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் எம்.ஜி.ஆா். சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. முருகன் தலைமை வகித்தாா். சிபிஐ நிா்வாகக் குழு உறுப்பினா் வி. பாலமுருகன், வாழும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் காளிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது, வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிரிழந்த 715 விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும். மின்சாரத்தை தனியாரிடம் வழங்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் டிராக்டரில் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT