மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூா்த்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கள்ளழகா் கோயில் நிா்வாக உதவி ஆணையா் மு. ராமசாமி, தக்காா் பிரதிநிதி நல்லதம்பி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கண்காணிப்பாளா், அலுவலா்கள், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.