மதுரை

லாரி கவிழ்ந்து ஓட்டுநா் பலி

DIN

மதுரை மாவட்டம், சத்திரப்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் யானைமலை குவாரி பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (50). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை-நத்தம் சாலையில் லாரியை ஓட்டிச்

சென்றாா். கடவூா் பகுதியில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த இளையராஜாவை அந்தப் பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக இளையராஜாவின் மகன் சிவா அளித்த புகாரின்பேரில் எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT