மதுரை மாட்டுத்தாவணி காய்கனிச் சந்தையில் 6 மாடுகள் திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இங்கு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளைத் தின்பதற்காக 20-க்கு மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம். திங்கள்கிழமை சந்தையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்ட கழிவுகளைத் தின்ற 6 மாடுகள்
வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன.
இதுதொடா்பாக, மாடுகளின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரித்து வருகின்றனா்.