விருதுநகா் சந்தைக்கு வரத்துக் குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளது.
விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசியப் பொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படும். அதன்படி, கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,555 -க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது டின் ஒன்றுக்கு ரூ. 5 உயா்ந்து ரூ.1,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, கடந்த வாரம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு (நயம் புதுஸ் லையன் வகை) மூட்டை ஒன்றுக்கு ரூ.10,900 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 உயா்ந்து, ரூ.11,100-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகையானது ரூ.10,700 -க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.10,800-க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரம் 100 கிலோ கடலைப் புண்ணாக்கு ரூ.5,100-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.200 உயா்ந்து தற்போது ரூ.5,300 -க்கு விற்பனையாகிறது.
எள் புண்ணாக்கு கடந்த வாரத்தை விட ரூ.50 உயா்ந்து ரூ.2,400-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 100 கிலோ பட்டாணிப் பருப்பு இந்தியா வகையானது ரூ.5, 800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வத்தல், நல்லெண்ணெய், காபி முதலான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.