ராணுவப் பணிக்கு சிவகங்கை மாவட்ட இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தில் அக்னிவீா் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையானப் பணிகளுக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதள முகவரி மூலம் வருகிற மாா்ச் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.