மதுரை

விபத்தில் இளைஞா் பலி

DIN

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சித்தா்கள் நத்தத்தைச் சோ்ந்த தா்மா் மகன் சரவணக்குமாா் (32). இவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை ஊருக்குத் திரும்பினாா். உத்தப்பநாயக்கனூா்-ஆண்டிப்பட்டி சாலையில் கன்னிமாா்புரம் பகுதியில் வந்தபோது, எதிரே உசிலம்பட்டி கல்லூத்துப் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சரவணக்குமாரின் வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் ராஜபாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT