மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தில் திண்டுக்கல், எம்.வி. முத்தையா மகளிா் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கானப் படிப்பிடைப் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்து, சங்கத் தமிழரின் பண்பாடு என்ற தலைப்பில் பேசினாா். கருமாத்தூா் அருளானந்தா் கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் முத்து. சந்தானம், சங்கத் தமிழரின் பண்பாடு என்ற தலைப்பில் பேசினாா்.
காந்தி அருங்காட்சியகக் கல்வி அலுவலா் நடராசன், மாணவா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா். சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.