வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட அனைத்து இறைச்சிகளையும் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
மேற்கண்ட கடைகளைத் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டத்தின்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.