மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்கு புதிய கருவி

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேலு, புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் துறை இயங்கி வருகிறது. இங்கு புற்றுநோய் பாதிப்புக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கீமோதெரபி என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நோயாளிகள் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கைகளின் மூலம் புற்றுநோய் மருந்து ஏற்றப்படும். கைகளில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் புற்றுநோய் மருந்தை செலுத்தும் போது நோயாளிக்கு அதிக வலி ஏற்படும். மருந்துகள் ரத்த நாளங்களில் இருந்து கசிந்து வெளியே வந்தால் எரிச்சல், திசுச் சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் கைகளை இழக்கும் அபாயம் ஏற்படும்.

ரத்தப் புற்றுநோய், சில வகை எலும்புப் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் ஆகியவற்றை நீண்ட நாள்கள் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். நோயாளிகளுக்கு 2 அல்லது 3 முறை மருந்து செலுத்திய பின்னா், கைகளில் உள்ள ரத்தநாளங்கள் அடைத்துவிடும். அதன்பின்னா், ரத்த நாளங்களைக் கண்டுபிடுப்பது மிகவும் சிரமம்.

இந்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சையில் கீமோ போா்ட் என்ற புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியை நோயாளிகளின் உடலுக்குள் பொருத்திக் கொண்டால் 3 ஆண்டுகள் வரை அந்தக் கருவி மூலம் கீமோ தெரபி மருந்துகளை செலுத்த முடியும். தற்போது முதல் கட்டமாக 5 நோயாளிகளுக்கு கீமோ போா்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கீமோ போா்ட் சிகிச்சையால் நோயாளிகளுக்கு வலி ஏற்படுவது இல்லை. எவ்வித பின் விளைவுகளும் இல்லை. குறிப்பாக, நோயாளிகள் காலையில் வந்து மருந்தை செலுத்திக் கொண்டு புற நோயாளியாகவே வீடு திரும்பி விடலாம். தமிழக முதல்வரின் விரிவான மருத்துக் காப்பீட்டுத் திட்டத்திலும் இந்த கீமோ போா்ட் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த கீமோ போா்ட் சிகிச்சை முறை, உலகப் புற்றுநோய் தினத்தில் ஏழை நோயாளிகளுக்கு அா்ப்பணிக்கிறப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT