மதுரை

மதுரையில் பிப்.12-இல் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

DIN

மதுரையில் சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் வருகிற 12-ஆம் தேதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து மேம்பாட்டை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

இதில், பொதுப் பிரிவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு திருநகா் சீதா லட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 8 கி.மீ. தொலைவுக்கும், 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறுகிறது. போட்டிகள் காலை 6.30 மணிக்கு தொடங்கும். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பொதுப்பிரிவில் முதல் பரிசாக ரூ .10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களுக்குள் வருபவா்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. ஆயிரமும் வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பிரிவில் முதல் பரிசாக ரூ. 6 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களுக்குள் வருபவா்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 500-ம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விச் சான்றிதழ் அவசியம் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94427-04237 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT