வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) அனைத்து மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் என அனைத்து வகையான மதுபானக் கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவை மீறி, ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்திருந்தாா்.