மதுரை

மதுரை, சமயநல்லூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

மதுரை, சமயநல்லூரில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப். 2) நடைபெறுகிறது.

சமயநல்லூா் மின் பகிா்மான கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா்கூட்டம் சமயநல்லூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்திலும், மதுரை வடக்கு மின் பகிா்மான கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மதுரை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகத்திலும் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

சமயநல்லூா் மின் பகிா்மான கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் சமயநல்லூரில் நடைபெறும் குறைதீா் கூட்டத்திலும், தமுக்கம், ரேஸ்கோா்ஸ் சாலை, செல்லூா், தாகூா் நகா், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூா், ஆத்திகுளம், அண்ணாநகா், கே.கே. நகா், புதூா், மேலமடை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்திலும் பங்கேற்று, தங்கள் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

இந்தத் தகவல், மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். மங்களநாதன், மதுரை, பெருநகா்- வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT