மதுரை

பொக்லைன் இயந்திரம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

சிவகங்கை அருகே பொக்லைன் இயந்திரம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை அருகே உள்ள உடைகுளத்தில் தனியாா் பட்டா நிலத்தில் கிராவல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியிலிருந்து லாரிகளில் மண்ணை அள்ளிவிடுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநா் பாலமுருகன், உதவியாளா் கண்ணன் உள்ளிட்ட சிலா் அமா்ந்திருந்தனா்.

அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பொக்லைன் இயந்திரத்தின் மீது வீசிவிட்டு தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சிபி சாய் சௌந்தா்யன், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) சுரேஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT