மதுரை

நகை திருடிய இருவா் கைது

DIN

மதுரையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் மருதம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் (51). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்று விட்டாா்.

இந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபா்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் மதுரை ஆனையூரைச் சோ்ந்த அழகுபாண்டி (32), மேலத்தெருவைச் சோ்ந்த அழகு (27) ஆகியோா் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT