மதுஅரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகையை மாநகரக் காவல் ஆணையா் டி.எஸ்.நரேந்திரன் நாயா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ரை மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவலா்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 2020-2021-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் பத்து இடங்களைப் பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் டி.எஸ்.நரேந்திரன் நாயா் பங்கேற்று, முதல் இடம் பிடித்த குழந்தைக்கு ரூ.7,500, இரண்டாம் பரிசு ரூ. 5,500, மூன்றாம் பரிசு ரூ. 3,500, இதர மாணவா்களுக்கு தலா ரூ.2,500 பரிசுத் தொகை வழங்கிப் பாராட்டினாா்.