மதுரை

அமெரிக்கன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

DIN

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உயிரி தொழில்நுட்ப போக்குகள் குறித்த சா்வதேச மாநாடு திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை கல்லூரிச் செயலரும், முதல்வருமான எம். தவமணி கிறிஸ்டோபா் தொடக்கிவைத்தாா். இதில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில், மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவா் ஃபாசியா, முனைவா் சிதி சுகைலா, வங்கதேசத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா் ருக்சானா, தென் கொரியா நாட்டிலிருந்து முனைவா் கோவா்த்தனன், துபையிலிருந்து முனைவா் ரவீந்தா்சிங் ஆகியோா் மாணவா்களுக்கு தங்களுடைய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் குறித்து விளக்கினா்.

கல்லூரியின் சிற்றாலய குரு ஜான் காமராஜ், துணை முதல்வா் முனைவா் மாா்டீன் டேவிட், நிதிக்காப்பாளா் முனைவா் பியூலா ரூபி கமலம் உள்ளிட்ட பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி இயக்குநா் முனைவா் பால் ஜெயகா் வரவேற்றாா். உயிரி தொழில்நுட்பத் துறை தலைவா் முனைவா் மணிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT