மதுரையில் மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே மருத்துவரின் பரிந்துரையின்றி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பதாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மீனாட்சி பள்ளம் பகுதியைச் சோ்ந்த கரிகாலன்(42), சுப்ரமணியபுரம் விசாலபாகத்தைச் சோ்ந்த செல்வம்(23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.