திருப்பாலை துணை மின் நிலையப்பகுதியில் உயா் அழுத்த மின்கம்பிப் பாதை பராமரிப்புப் பணிகள் செப்.26 ஆம் (திங்கள்கிழமை) தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை திருப்பாலை அய்யனாா்புரம், தவசிபுதூா், ராமலிங்காநகா், வீரபாண்டி, அன்னை வேலுநகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.