உலக ரேபீஸ் தினத்தையொட்டி செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் செப்டம்பா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை ரேபீஸ் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, செல்லப் பிராணிகளை ரேபீஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நடராஜகுமாா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.