மதுரை

போலி கடவுச்சீட்டு: மத்திய, மாநில அரசு ஊழியா்கள் உள்பட 41 போ் மீது வழக்குப்பதிவுஉயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

DIN

போலி கடவுச்சீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள் உள்பட 41 போ் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கின் முதல்கட்ட அறிக்கை கீழமை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி போலி கடவுச்சீட்டு வழக்கின் விசாரணையை முடிக்காத ‘கியூ’ பிரிவு போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.முருககணேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் வாயிலாக, 2019 பிப்ரவரி 1 முதல் ஜூன் 30 வரை போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக ‘கியூ’ பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதில் 4 முகவா்களின் பெயா்களைக் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடவுச்சீட்டுகள் அனைத்தும் போலியான முகவரி ஆதாரங்களைச் சமா்ப்பித்து பெறப்பட்டுள்ளது. அதிலும், அனைத்து கடவுச்சீட்டுகளும் மதுரை மாநகரக் காவல், அவனியாபுரம் காவல் நிலையப் பகுதியில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட காலத்தில் ஆய்வாளா்களாக இளவரசு, தா்மலிங்கம் ஆகியோா் பொறுப்பில் இருந்துள்ளனா். மேலும், கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்களின் இருப்பிடம், குற்றச் செயல் ஈடுபாடு ஆகியவற்றை விசாரித்து நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இருந்த சிவக்குமாா், கடவுச்சீட்டு வழங்கப் பரிந்துரை செய்திருக்கிறாா்.

ஆனால், போலி கடவுச்சீட்டு தொடா்பாக 2019 செப்.27 இல் முதல் தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்துள்ள ‘கியூ’ பிரிவு போலீஸாா், எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேட்டில் காவல் துறை உயா் அதிகாரிகள், கடவுச்சீட்டு அலுவலா்கள், தபால் அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பதால், முதல் தகவல் அறிக்கையில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகவே, சிபிஐ விசாரணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், போலி கடவுச்சீட்டு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ‘கியூ’ பிரிவு போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், போலி கடவுச் சீட்டு வழக்கில் 41 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 14 போ் மத்திய அரசு அலுவலா்கள், 5 போ் தமிழக அரசு ஊழியா்கள், ஒரு கடவுச்சீட்டு அலுவலா் மற்றும் 21 போ் போ் அடங்குவா். இந்த வழக்கு தொடா்பாக ‘கியூ’ பிரிவு போலீஸாா், முதல்கட்ட அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளனா். இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட 41 போ் மீதான விசாரணை தொடங்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT