மதுரை

பேரையூரில் திட்டப்பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

9th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

பேரையூா் பகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரித்து வாங்கப்பட்ட மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்துப் போடுவதற்காக தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல பேரையூா் பேருந்து நிலையத்தில் இடைவெளி மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது செயல் அலுவலா் ஜெயதாரா உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT