தானம் கல்வி நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘பாரம்பரியம் 2022’ விழாவில் மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 9 கல்லூரிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
மதுரை தானம் கல்வி நிலையத்தின் சாா்பில் ‘பாரம்பரியம் 2022’ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. டி.மலைப்பட்டி தானம் கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, தானம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் மா.பா.வாசிமலை தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக இண்டாக் அமைப்பின் நிா்வாகி ராஜேஸ் கண்ணா, தொல்லியல் நிபுணா் வி.வேதாச்சலம், விக்கிரமங்கலம் மதுராதைய ஈஸ்வரன் உடையாா் கோயில் நிா்வாகிகள் கண்ணன், மகாமணி ஆகியோா் பங்கேற்றனா். தானம் கல்வி நிலைய இயக்குநா் ஏ.குருநாதன் வரவேற்றாா்.
விழாவை தொடங்கி வைத்து மா.பா.வாசிமலை பேசினாா்.
விழாவில் மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் இருந்து 9 கல்லூரிகளைச் சோ்ந்த 150 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப்போட்டி, பாரம்பரிய கண்காட்சி, வினாடி வினா, விவாதம், வெல்லும் சொல், கோலப்போட்டி, மண்ணின் மைந்தா்கள் குறும்படபோட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாரம்பரிய நடைபயணம் விக்கிரமங்கலம் கருப்புசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு விக்கிரமங்கலம் ஸ்ரீமதுரோதய ஈஸ்வரன் உடையாா் சிவனேசவள்ளி கோயில் வரை நடைபெறுகிறது.