மதுரை

பேரையூா், மேலூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை: 3 போ் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் மற்றும் மேலூா் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றதாக 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 116 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அல்லிகுண்டத்தை சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (37), காா்த்திகேயன் மகன் ராஜாராம் (32), சின்னகட்டளையை சோ்ந்த கந்தசாமி மகன் பாண்டி(33)

ஆகியோா் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 36 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல்செய்தனா்.

இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

மேலூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக ரவிச்சந்திரன், முனியாண்டி, சுப்பிரமணியன், கீழவளவு பகுதிகளில் ரவிச்சந்திரன், ஜெகதீசன், ரவி, கொட்டாம்பட்டி பகுதியில் பிரசாத் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் விற்பனைக்கு வைத்திருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT