மதுரை

கதா் அங்காடிகளில் துணிகளை வாங்கி ஏழை நெசவாளா்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா்

DIN

கதா் அங்காடிகளில் துணிகளை வாங்கி ஏழை நெசவாளா்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சா் பி. மூா்த்தி பேசினாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மேலமாசி வீதி கதா் விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முதல் விற்பனையை தொடக்கி வைத்து அவா் பேசியது:

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அண்ணா, பெரியாா், காமராஜா் மற்றும் காந்தியடிகள் போன்ற பெருந்தலைவா்களின் பிறந்த தினம் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கதா் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2021-இல் கதா் அங்காடிகளுக்கு சிறப்பு விற்பனைக்காக ரூ.58 லட்சம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ.43.54 லட்சத்துக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது 2022-ஆம் ஆண்டுக்கு ரூ.75 லட்சம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கதா், பட்டு, பாலியஸ்டா், உல்லன் ரகங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள், மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்து கிராமப்புற ஏழை நெசவாளா்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகலா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT