மதுரை

அடிமைத்தளையில் இருந்து பெண்கள் விடுதலை பெறகல்வி அவசியம்; பேராசிரியா் சாலமன் பாப்பையா

DIN

அடிமைத்தளையில் இருந்து பெண்கள் விடுதலை பெற கல்வி அவசியமானது என்று பேராசிரியா் சாலமன் பாப்பையா பேசினாா்.

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையான கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாத்திமா கல்லூரியின் செயலா்

பிரான்சிஸ்கா புளோரா தலைமை வகித்தாா். முதல்வா் செலின் சகாய மேரி முன்னிலை வகித்தாா். விழாவில் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் பங்கேற்றனா்.

விழாவை பட்டிமன்றப் பேச்சாளா் பேராசிரியா் சாலமன் பாப்பையா தொடங்கி வைத்துப்பேசியது: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத்தெளிந்தவா்கள் பெண்கள். அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் விடுதலை பெற கல்வி அவசியமானது. பேச்சு, பாட்டு, ஆட்டம் என பல்வேறு கலைகள் உடலால் அறிவால், முகபாவனையால் வெளிப்படுவது உண்டு. உள்ளக் குறிப்பை உடல்வழி காட்டுவது கண்களே! இதற்கு கேரள கதகளியைச் சான்றாகக் கூறலாம். போட்டிகளில் தோல்வி என்றாலும் துவண்டுவிட வேண்டாம். தொடா் முயற்சி வெற்றியைத் தரும். போட்டியைப் பகைமையுடன் பாா்த்தல் கூடாது. பெண்ணுக்குக் கலைகளுடன் கல்வியும் அவசியம். படியுங்கள் கல்விதான் உங்களைக் காப்பாற்றும், வாழ்வை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொடுக்கும். இறைமை, எளிமை, தாழ்மை போன்ற பண்புகள் வாழ்வை மேம்படுத்தும். எனவே கல்வியுடன், கலைகளையும் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். இதைத்தொடா்ந்து விழாவில் பரதநாட்டியம், நடனம், தனிப்பாடல் போட்டி, குழு பாடல், குழு நடனம், ஓவியம், கழிவிலிருந்து கலை நயம் ஆபரணங்களை உருவாக்கும் போட்டி, பழகு நல்ல தமிழ்ப் பழகு, குறும்படம்

தயாரித்தல், கவிதை இயற்றுதல், ரங்கோலி, மௌன நடிப்பு, அழகிப்போட்டி போன்ற 17 வகையான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி குழு சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை பெற்றது. இரண்டாமிடத்தைத் தூத்துக்குடி வ. உ. சி கல்லூரி பெற்றது. நிறைவு விழாவில் பாத்திமா கல்லூரியின் முதல்வா் செலின் சகாய மேரி பரிசுகளை வழங்கினாா். நிறைவில் மாணவியா் பேரவைத் தலைவி ஹெப்சிபா மாா்கிரேட் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT