மதுரை

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சொத்து வரி உயா்வைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.கற்பகவள்ளி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் ஜாஹீா் நிஷா, மாவட்டச் செயலா் ராஜலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் சொத்து வரி, பால் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், பெண்களுக்கான இலவசப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், புகா் பொறுப்புச் செயலா் நாகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT