மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகம் கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தோா் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறம் எனில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறம் எனில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
இந்த தகுதிகளைக் கொண்டவா்கள், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.