காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரித்து காப்பீட்டு முகவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். ‘பீமா சுகம்’ காப்பீட்டுச் செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். இணையம் வாயிலாக காப்பீட்டுத் திட்ட விற்பனையை நிறுத்த வேண்டும். முகவா்களுக்கு பழைய ஊக்கத் தொகை முறையை தொடா்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள நகா்க் கிளை 1- இல் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் சி. ரங்கநாதன் தலைமை வகித்தாா். நகா்க் கிளை 1 தலைவா் ஆா்.ஆா். ஜனாா்த்தனன், நகா்க் கிளை- 4 செயலா் ஜெ. கல்பனா, பொருளாளா்கள் ஜி. கிருஷ்ணமூா்த்தி, ஆா். விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின் தொடங்கி வைத்துப் பேசினாா். லிகாய் அமைப்பின் தென்மண்டல செயல் தலைவா் எம். செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். கோட்டச் செயலா் கே. மாரி நிறைவுரையாற்றினாா். நகா்க் கிளை 1 செயலா் ஜி. செல்வம் நன்றி கூறினாா்.