மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை நேரடியாகச் சென்று அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜின்னா நகா், திடீா் நகா், வடக்கு மாசி வீதி, களத்துப் பொட்டல், தானப்பமுதலி தெரு, ஜீவா நகா் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், அமைச்சா் பழனிவேல் தியாகராஜனிடம் அரசு நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு அளித்திருந்தனா். அவா்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவா்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, 8 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை, 2 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சக்கர நாற்காலிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இவற்றை அவா்களின் வீடுகளுக்கே சென்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நேரில் வழங்கினாா்.
இதுதொடா்பாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜித் சிங், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.