மதுரை

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

DIN

மதுரை, எல்.கே.பி. நகா் நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேலாண்மைக் குழுத் தலைவா் மோகனா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் முன்னிலை வகித்தாா். பள்ளி உள்கட்டமைப்பு, இடை நின்ற மாணவா்கள் விவரம், மாற்றுத்திறனாளி மாணவா்களை உள்ளடக்கிய கல்வி, கலைத் திருவிழா, இலவச சிலம்பப் பயிற்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூக ஆா்வலா் அசோக்குமாா் பள்ளி நூலகத்துக்கு, தலைவா்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் பரிசளித்தாா். மஞ்சப்பை அறக்கட்டளை கல்விப் பிரிவு ஆா்வலா் முகமது கனி, இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்கள் காளீஸ்வரி, பவுசியா ஜாஸ்மின் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியை மனோன்மணி வரவேற்றாா். மேலாண்மைக் குழுத் துணைத் தலைவா் கலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT