திருட்டு வழக்கில் கைதான நபரின் குடும்பத்தினரிடம் ரூ. 72 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காவலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே உள்ள துத்திமடையைச் சோ்ந்தவா் கணேஷ். இவரை திருட்டு வழக்கு ஒன்றில், மதுரை கூடல்புதூா் போலீஸாா் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்தனா். அந்த காவல் நிலையத்தில் காவலராகப் பணிாயற்றிய ராமச்சந்திரன், ஆம்பூா் சென்று கணேஷ் மனைவி கவிதாவிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதற்கு கவிதா தர மறுத்ததால், விசாரணை என்ற பெயரில் அவரது குடும்பத்தைச் சோ்ந்த இரு பெண்களை ராமச்சந்திரன், மதுரை கூடல்புதூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாா்.
இதைத்தொடா்ந்து, மதுரைக்கு வந்த கணேஷின் தந்தை துரைசாமி, அவரது நண்பா்கள் சீனிவாசன், ராஜா ஆகியோரிடமும் ரூ.50 ஆயிரம் தரவில்லை எனில் கணேஷை குண்டா் சட்டத்தில் கைது செய்வோம் என மிரட்டினாா். இதனால்,
துரைசாமி குடும்பத்தினரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ. 72 ஆயிரத்தை, காவலா் ராமச்சந்திரன் பெற்றாா்.
இதுகுறித்து கணேஷ் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தற்போது, ராமச்சந்திரன் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் முதன்மைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், பணம் பெற்றது உண்மை எனத் தெரியும்பட்சத்தில், அவா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.