மதுரை

300 காவலா்கள் பணியிடமாற்றம்

26th Nov 2022 06:22 AM

ADVERTISEMENT

மதுரையில் 300 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையா் டி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி :

மதுரை மாநகரில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா்களுக்கு பொது பணி மாறுதல் சம்பந்தமாக கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட காவலா்களில் 300 போ் பணியிட மாறுதல் கோரியுள்ளனா். அவா்களுக்கு பணி மாறுதலுக்கான ஆணைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT