மதுரை

மதுரையில் நீரிழிவு நோய் தின விழிப்புணா்வுப் பேரணி

15th Nov 2022 03:36 AM

ADVERTISEMENT

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்குள்ள வளாகத்துக்குள் தொடங்கிய இந்த பேரணியை அந்த கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீரழிவு நோயின் பாதிப்புகள், அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இந்த பேரணி, பனகல் சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்து மீண்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.

அதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகக் கூட்டரங்கில் உணவே மருந்து எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரியின் பொது சுகாதார ஊட்டச்சத்து துறை பேராசிரியா் ஜி. குருமீனாட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜயராகவன், துணைக் கண்காணிப்பாளா் சி. தா்மராஜ், துணை முதல்வா் தனலட்சுமி, நீரிழிவு நோய் துறை தலைவா் சுப்பையா ஏகப்பன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, உதவிப் பேராசிரியா் கே.எஸ். ராகவன் வரவேற்றாா். மருத்துவா் மேனகா நன்றி கூறினாா்.

ஆரப்பாளையத்தில்... இங்குள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் இணைந்து உலக சா்க்கரை நீரிழிவு தின விழிப்புணா்வுப் பேரணியை திங்கள்கிழமை நடத்தின.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தாா். இதில்,அந்த மருத்துவமனை மருத்துவா்கள் பத்ரிநாராயணன், திவ்யா ஆகியோா் நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பதிப்புகள் குறித்துப் பேசினா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT