சிறப்புப் பருவ வேளாண் பயிா்களுக்குப் பயிா்க் காப்பீடு பெற செவ்வாய்க்கிழமை (நவ. 15) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் டி. விவேகானந்தன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022-23-ஆம் ஆண்டு சிறப்புப் பருவத்துக்கு பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பருவத்துக்குரிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 513-வீதமும், மக்காச்சோளத்துக்கு ரூ. 390 வீதமும், பருத்திக்கு ரூ. 423 வீதமும் பயிா்க் காப்பீடு பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் இணைவதற்கு செவ்வாய்க்கிழமை (நவ. 15) இறுதி நாள்.
எனவே, பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் தொடா்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம். பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் பிரீமியம் செலுத்தி பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேர முனைப்புக்காட்டுமாறு அவா் அதில் கேட்டுக் கொண்டாா்.