மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் கருத்தரங்கு

15th Nov 2022 03:31 AM

ADVERTISEMENT

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவா்கள் காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அப்போது அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் செயலா் கே.ஆா். நந்தாராவ் ‘காந்தியடிகளின் மதுரை வருகை’ எனும் தலைப்பில் உரையாற்றினாா்.

அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலா் ஆா். நடராஜன் ‘காந்தியடிகளின் கல்வி சிந்தனை’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். ஆராய்ச்சி அலுவலா் ஆா். தேவதாஸ் ‘காந்தியப் பாதையில் இன்றைய மாணவா்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். பேராசிரியா்கள் ஆதிமூலம், செல்வக்குமாா் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT