மதுரை

மதுரை அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாடிப்பட்டி அருகே உள்ள கீழ நாச்சிகுளத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (33). இவா், கரடுப்பட்டியில் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் நிலையம் நடத்தி வருகிறாா். மேலும், எஞ்ஜின் ஆயில் விற்பனையும் செய்து வருகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு சோழவந்தான்-பள்ளப்பட்டி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஹரிகிருஷ்ணனை தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இச்சம்பவம் தொடா்பாக, ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT