மேலூா்: வரிச்சியூா் அருகே கருப்புக்கால் கிராமத்தைச் சோ்ந்த ஏ.எம்.பிச்சை அம்பலத்தின் மனைவி ஆயம்மாள் (99), உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மாலை காலமானாா்.
இவருக்கு, மாநில ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவரும், தொழிலதிபருமான ராஜசேகரன், நல்லமணி, முத்துராமன், பாலசுப்பிரமணி ஆகிய மகன்கள் உள்ளனா். அவரது உடலுக்கு, அமைச்சா்கள் பி.மூா்த்தி, பெரியகருப்பன், முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், விஜயபாஸ்கா், தமிழரசி ரவிக்குமாா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசியல் கட்சியினா் ஜல்லிக்கட்டு பேரவை நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். கருப்புக்கால் கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.