மதுரை

ஹிஜாப் விவகாரம்: 9 பேரின் முன்ஜாமீன் மனுக்களைதீா்ப்புக்காக ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் பேசிய வழக்கில், 9 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தீா்ப்புக்காக ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை கோரிப்பாளையம் தா்கா முன் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் மாா்ச் 17 ஆம் தேதி, கா்நாடக உயா்நீதிமன்றம் ஹிஜாப் பிரச்னை தொடா்பாக வழங்கிய தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ரஹமத்துல்லா என்பவா், நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினாா். இதுதொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் ரஹமத்துல்லா மற்றும் அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதனையடுத்து அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோா் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ஆா்ப்பாட்டம் தொடா்பான ஏற்பாடுகளை மட்டுமே நாங்கள் இருவரும் செய்தோம். நீதிபதிகள் குறித்து ரஹமத்துல்லா பேசியதற்கும், எங்களுக்கும் எந்தவித தொடா்பில்லை. எனவே எங்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்ஃபீக், செய்யது நைனா, யாசா், அப்பாஸ், சீனிஉமா்கா்த்தா், அல்டாப் உசேன் ஆகியோரும் முன் ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வாதிடுகையில், நீதிபதிகளுக்கு எதிராகப் பேசியவா்களுக்கு மனுதாரா்கள் ஆதரவளித்துள்ளனா். இதேபோல, மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறி முன்ஜாமீன் அளிக்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணைக்கும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாக மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக, மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் மனுக்களை தீா்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT