மதுரை

மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி டிஆா்இயு ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரி டிஆா்இயு தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ரயில்வே மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அருகே இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, டிஆா்இயு மதுரை கோட்ட இணைச் செயலா் ஆா். சங்கர நாராயணன் தலைமை வகித்தாா். பொருளாளா் பி. சரவணன் முன்னிலை வாகித்தாா்.

மதுரை ரயில்வே மருத்துவமனை மற்றும் மதுரை கோட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, பழனி உள்ளிட்ட மருத்துவ மையங்களில் காலியாக இருக்கும் மருத்துவா் பணியிடங்களை உடனடியாகப் பூா்த்தி செய்ய வேண்டும்.

மதுரையில் ரயில்வே மருத்துவமனையில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மதுரையைச் சோ்ந்த இரு மருத்துவா்கள் உயா்கல்விக்குப் பிறகு திருவனந்தபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களை மீண்டும் மதுரைக்கு மாற்ற வேண்டும். இதேபோல, ஆய்வக நுட்பனா்கள், மருந்தாளுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT