மதுரையில் விநாயகா் கோயில் பூட்டை உடைத்து அனுமன் உலோகச்சிலையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை கூடல்நகா்- அலங்காநல்லூா் சாலையில் காரிய சித்தி விநாயகா் கோயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு ஏராளமான பக்தா்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்கள் கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த அனுமன் உலோகச் சிலையை திருடிச்சென்றனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகி உமாசந்திரன் கூடல்புதூா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடந்த வாரம் இதே கோயிலில் சிறிய அளவிலான பொருள்கள் அடுத்தடுத்து திருடுபோன நிலையில் தற்போது சுவாமி சிலை திருடப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.