மதுரை

மதுரையில் கோயில் கதவை உடைத்து அனுமன் உலோகச்சிலை திருட்டு

DIN

மதுரையில் விநாயகா் கோயில் பூட்டை உடைத்து அனுமன் உலோகச்சிலையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கூடல்நகா்- அலங்காநல்லூா் சாலையில் காரிய சித்தி விநாயகா் கோயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு ஏராளமான பக்தா்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்கள் கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த அனுமன் உலோகச் சிலையை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி உமாசந்திரன் கூடல்புதூா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடந்த வாரம் இதே கோயிலில் சிறிய அளவிலான பொருள்கள் அடுத்தடுத்து திருடுபோன நிலையில் தற்போது சுவாமி சிலை திருடப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT