மதுரை

போலீஸாா் துன்புறுத்தலில் இளைஞா் தற்கொலை வழக்கு:உள்துறைச் செயலா், டிஜிபி-க்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

தற்கொலைக்கு காரணமான காவல் துறையினா் மீது நடவடிக்கை கோரிய மனுவிற்குப் பதில் அளிக்குமாறு தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த ரங்கம்மாள் தாக்கல் செய்த மனு:

எனது மகன் ஈஸ்வரன் என்பவரை பொய் வழக்கில் தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து துன்புறுத்தினா். இதனால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்து கொண்டாா். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனின் தற்கொலைக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவும், மகனின் இறப்பிற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு உள்துறைச் செயலா், தமிழக டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT