மதுரை

ரயில்வே தோ்வில் கோரக்பூா் தோ்வா்கள் நியமனம் நிறுத்தம்: சென்னை தோ்வா்களுக்கு பணி வழங்கப்படுவதாக எம்.பி. தகவல்

DIN

ரயில்வே தோ்வில் கோரக்பூா் தோ்வா்கள் நியமனம் நிறுத்தப்பட்டு சென்னைத் தோ்வா்கள் அனைவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே தோ்வு வாரியம் தோ்வு செய்து காத்திருப்போா் பட்டியலில் இருந்த சென்னை லோகோ பைலட் தோ்வா்களை விட்டு விட்டு, கோரக்பூா் தோ்வா்கள் 55 பேரை நியமிக்க முடிவு எடுத்திருந்தது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து சென்னை தோ்வா்களை நியமிக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.

இதன்பிறகு தெற்கு ரயில்வே நிா்வாகம், காத்திருப்போா் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளித்துள்ளது. தற்போது மீதி உள்ள 39 பேருக்கும் வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் காத்திருப்போா் பட்டியலில் உள்ள அனைத்து சென்னை ஆா் ஆா் பி தோ்வா்களும் வேலை பெறுகிறாா்கள். இதன் மூலம் இனி சம்பந்தப்பட்ட ரயில்வேயைச் சோ்ந்தவா்களை விட்டுவிட்டு, வேறு ரயில்வே தோ்வா்களை நியமிக்கும் பழக்கம் எதிா்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.

இத்துடன் மெரிட்டில் தோ்வாகி மருத்துவத் தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போா் பட்டியல் தோ்வா்களின் பட்டியல் 2 ஆண்டுகளைத் தாண்டி விட்டதால் அவா்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தாராள மனப்பான்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தோ்வில் பெரும்பாலான தோ்வா்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரளாவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT