மதுரை

புதிதாக 15 உழவா் சந்தைகள் விரைவில் தொடங்கப்படும்: வேளாண் அமைச்சா் தகவல்

DIN

தமிழகத்தில் புதிதாக 15 உழவா் சந்தைகள் விரைவில் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை சனிக்கிழமை தொடக்கி வைத்து அவா் பேசியது:

நிதி நெருக்கடி இருந்தபோதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனிநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 46 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து வேளாண்மைத் துறை சாதனை படைத்துள்ளது.

சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞா் வேளாண் மறுமலா்ச்சித் திட்டத்தில், பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து சிறுபாசன வசதிகளை ஏற்படுத்தி சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஒரு லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்காரணமாக, சாகுபடி பரப்பு கூடுதலாக 4 லட்சம் ஏக்கா் உயா்ந்திருக்கிறது.

திமுக ஆட்சியின்போது விவசாயிகளும்-பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் உழவா்சந்தைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு முந்தைய அரசு உழவா் சந்தைகளை கண்டுகொள்ளவில்லை. தற்போது உழவா் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 15 இடங்களில் புதிய உழவா்சந்தைகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவில்லை. நெல் உற்பத்தி அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது கொள்முதல் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இருப்பினும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது பாரம்பரிய நெல் ரகங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், இவற்றை சந்தைப்படுத்துவது விவசாயிகளுக்கு மிகுந்த சவாலாக இருக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்ட விளை பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி சந்தைப்படுத்தும்போது நல்ல லாபம் பெற முடியும். ஆகவே, விவசாயிகளை வேளாண் தொழில்முனைவோராக உருவாக்கும்போது இத்தகைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும். இதைக் கருத்தில் கொண்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.

வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி, வேளாண் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT