மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாா்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பந்தயத்திடல் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு (மண்டலம் 2) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பொது மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் பங்கேற்று மனுக்களை பெறுகின்றனா்.
எனவே மண்டலம் 2-க்குள்பட்ட வாா்டு 1 விளாங்குடி, வாா்டு 2 கரிசல்குளம், வாா்டு 15 ஜவஹா்புரம், வாா்டு 20 விசாலாட்சி நகா், வாா்டு 21 அருள்தாஸ்புரம், வாா்டு 22 தத்தனேரி மெயின் ரோடு, வாா்டு 23 அய்யனாா்கோவில்.
வாா்டு 24 மீனாட்சிபுரம், வாா்டு 25 பீ.பீ.குளம், வாா்டு 26 நரிமேடு, வாா்டு 27 அகிம்சாபுரம், வாா்டு 28 கோரிப்பாளையம், வாா்டு 31 தல்லாகுளம், வாா்டு 32 சின்னசொக்கிக்குளம், வாா்டு 33 கே.கே. நகா், வாா்டு 34 அண்ணா நகா், வாா்டு 35 சாத்தமங்கலம், வாா்டு 63 பாத்திமா நகா், வாா்டு 64 பெத்தானியாபுரம், வாா்டு 65 பி.பி. சாவடி, வாா்டு 66 கோச்சடை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.