மதுரை: மதுரையில், அடகுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நகைகளைத் திருட முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதை குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை கோ. புதூரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன். இவா் அதே பகுதியில் உள்ள பாரதியாா் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை அடகுக்கடையை வைத்தியநாதன் மூடி விட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில், அன்று நள்ளிரவில் அடகுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அடகு நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனா். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதை மட்டும் ஒரு கிலோ மீட்டா் தூரம் தூக்கிச் சென்று அங்குள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் தெருவை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோா் குப்பைத் தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் கோ. புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று லாக்கரை மீட்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு லாக்கரில் இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் அடகுக் கடைக்கும் சென்று தடயங்களை சேகரித்தனா். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், குப்பைத்தொட்டியில் லாக்கா் கிடப்பதைக் கண்டவுடன் போலீஸாருக்கு துரிதமாக தகவல் அளித்த தூய்மைப்பணியாளா்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினா்.