மதுரை

விவசாயியைக் கொலை செய்தவருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயா்நீதிமன்றம் உறுதி

DIN

முன்விரோதத்தில் விவசாயியைக் கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை அடுத்த நாகமலைப் புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி முத்து. இவருக்குச் சொந்தமான ஆட்டுக் கொட்டகை அருகே, அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் மது அருந்தி வந்துள்ளாா். இதையடுத்து நாகராஜனை, முத்து கண்டித்துள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆட்டு கொட்டகைக்கு முத்து சென்றபோது, அங்கு வந்த நாகராஜன் அவரை மரக் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். கடந்த 2013அக்டோபா் 31 இல் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் நாகராஜனை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நாகராஜனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகராஜன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு, நாகராஜனின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT