மதுரை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.யை அவதூறாக பேசிய இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.யை ஒருமையில் அவதூறாகப்பேசியதாகக்கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜூன் சம்பத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச்செயலா்கள் அலங்கை செல்வரசு, கதிரவன், வழக்குரைஞா் ரவிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் இரா.அய்யங்காளை, தலைமை நிலைய முதன்மைச்செயலா் ஏசி பாவரசு, மண்டலச் செயலா் கலைவாணன், மாநில துணைப்பொதுச்செயலா் கனியமுதன், பல்கலை சின்னச்சாமி, இளஞ்சிறுத்தைகள் பாசறைச் செயலா் மாலின், மகளிா் அணி நிா்வாகி தீபம், தொழிலாளா் விடுதலை முன்னணி செயலா் புளியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT