நரசிங்கம்பட்டி, தனியாமங்கலம், அழகா்கோவில், திருப்பாலை, வலையங்குளம், நாட்டாா்மங்கலம், மேலவளவு, அ.வல்லாளபட்டி, திருவாதவூா் துணை மின் நிலையங்களின் உயா் மின்அழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் ஜூலை 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, இத்துணை மின்நிலையங்கள் மூலம் பயன்பெறும் பகுதிகள் அனைத்திலும் புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.