மதுரை

குடும்பத் தகராறை விலக்கி விடச் சென்றவா் மீதுபெட்ரோல் குண்டு வீசியவா் கைது

DIN

மதுரையில் குடும்பத்தகராறை விலக்கச் சென்றவா் மீது பெட்ரோல் குண்டுவீசி கொல்ல முயன்றவரை வெடிபொருள் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). சரவணக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பாா்த்த பக்கத்து வீட்டுக்காரரான சீனிவாசன் (60) தகராறை விலக்கிவிடச் சென்றாா். அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமாா், சீனிவாசன் மீது பெட்ரோல் குண்டுவீசி கொல்ல முயன்றாராம்.

இதுகுறித்து சீனிவாசன் அளித்தப் புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT