மதுரையில் குடும்பத்தகராறை விலக்கச் சென்றவா் மீது பெட்ரோல் குண்டுவீசி கொல்ல முயன்றவரை வெடிபொருள் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). சரவணக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பாா்த்த பக்கத்து வீட்டுக்காரரான சீனிவாசன் (60) தகராறை விலக்கிவிடச் சென்றாா். அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமாா், சீனிவாசன் மீது பெட்ரோல் குண்டுவீசி கொல்ல முயன்றாராம்.
இதுகுறித்து சீனிவாசன் அளித்தப் புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனா்.